இதன் பிறகு சாமிநாதன் தன் ஜாதிப் பெண்களாக ஒருவர் பின் ஒருவராக காதலிக்கத் தொடங்குகிறான்.
லதா என்ற பெண்ணை காதலித்து சிவன்மலையில் திருமணமும் செய்து கொள்கிறான். ஆனால், அடுத்த நாள், அவள் பெற்றோர் தாலியை அறுத்து இவளையும் சாமிநாதனையும் காவல் நிலையத்தில் வைத்து அடித்து, பிரித்து வைக்கின்றனர். அடுத்த நாள் அவள் விஷம் குடித்து இறக்க இருக்கிறாள்.
சாமிநாதனுக்கும் மல்லிகாவுக்கும் நடக்கும் அந்த நீண்ட தொலைபேசி உரையாடல் pleasure of text-க்கு உத்திரவாதம்.
சாமிநாதனின் அப்பா காய்ச்சலுக்கு மருத்துவரைப் பார்க்கச் செல்வது ஒரு அத்தியாயம் முழுவதும் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது. அவர் மருத்துவரிடம் காசு இல்லை என சொல்லிவிட்டு, வெளியில் வந்து மதுக்கடைக்குச் செல்கிறார்.
சாமிநாதனின் ஒவ்வொரு காதல் தோல்வியும் படிக்க சுவாரசியமாக உள்ளது.
குறைவாகப் படித்து, குறைந்த சம்பளத்தில் தறிபட்டறையில் வேலை செய்தும், விவசாயக் கூலியாகவும் இருக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் சின்னஞ்சிறு களிப்புகளையும் பெரும் துக்கங்களையும் இயல்பாக கடந்து செல்வதையும் வா.மு. கோமு சுவாசரியமாக சொல்லியுள்ளார்.