TAG சென்டர் நிகழ்வு பற்றி விமர்சகர் வட்டத்தினர் எழுதிய பதிவை நண்பர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள்.
மாமல்லனும் தொலைபேசியில் அழைத்து என்ன ஆனது எனக் கேட்டார். அது பற்றிய சிறு விளக்கமே இந்தப் பதிவு.
மாதத்தின் கடைசிச் செவ்வாயில் TAG-இல் ஒரு புத்தக விமர்சனக் கூட்டத்தை 'தமிழ் புத்தக நண்பர்கள்' என்ற அமைப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறது. TAG-இல் மொத்த இருக்கைகள் நூற்றைம்பது. 'தமிழ் புத்தக நண்பர்கள்' குழுவில் இருந்து எப்பொழுதும் நூறு பேர் வந்துவிடுகின்றனர் என்று அறிகிறேன்.
அக்டோபர் முதல் வாரமே அழகியசிங்கர் என்னைத் தொடர்புகொண்டு நிகழ்வுக்கு சாரு நிவேதிதாவின் வாசகர்கள் எத்தனை பேர் வருவார்கள் எனக் கேட்டிருந்தார். ஐம்பது பேர் வருவார்கள் எனச் சொல்லியிருந்தேன். அவர் இந்தத் தகவலை 'தமிழ் புத்தக நண்பர்கள்' குழுவின் நிர்வாகிகளிடம் தெரிவித்து, அதற்கேற்ப நூற்றைம்பது பேருக்கு உணவு தயாரிப்பது என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
விழா அன்று ஐந்து மணிக்கே அந்திமழை, கிழக்கு, உயிர்மை பதிப்பக நண்பர்கள் அரங்கு வாயிலில் புத்தக விற்பனையைத் தொடங்கிவிட்டனர். ஐந்தே காலுக்கு பிரபு காளிதாஸ், சாய் ராஜேஷ், ஸ்ரீநாத் உள்ளிட்ட சாரு வாசகர் வட்ட நண்பர்கள் அரங்கிற்கு சென்றுவிட்டனர்.
கூட்டம் நடைபெறுவது முதல் மாடியில். உணவு இரண்டாம் மாடியில். நான் ஐந்தரைக்குச் சென்றேன். பெரும்பாலான இலக்கியக் கூட்டங்களில் நடைபெறுவது போல், கீழ்த்தளத்தில், ஒரு நோட்டு புத்தகத்தில் புதிதாக வருபவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரிகளை வாங்கிக் கொண்டார்கள். நண்பர்களுடன் சென்று இரண்டாம் மாடியில் வழங்கப்பட்ட சிற்றுண்டியை அருந்திவிட்டு, முதல் தளத்திற்கு வந்தோம். விழா மிகச் சரியாக 6:29-க்கு ஆரம்பமானது. சாரு நிவேதிதா 6:25-க்கு முதல் தளத்திற்கு வந்தார்.
சுமார் ஆறு மணி வாக்கில், புகைப்பட நிபுணர் பிரபு ராமகிருஷ்ணன் முதல் தளத்திற்குள் கோபமாக நுழைந்தார். தன்னை உள்ளே விடவில்லை எனவும் விழா அமைப்பாளர்கள் தன்னிடம் மரியாதைக் குறைவாகப் பேசினர் என்றும் என்னிடம் முறையிட்டார். நானும் முத்துக்குமாரும் கீழே சென்றோம். பிரபு ராமகிருஷ்ணன் சொன்னது போல் யாரும் எங்களை எதுவும் கேட்கவில்லை. சரி, பார்கிங்-இல் ஏதேனும் பிரச்சினை என்று வெளியே சென்று பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே நுழைந்தோம். TAG சாரியும் அவரது உதவியாளரும் நோட்டு புத்தகம் இருந்த இடத்தில் நின்றுகொண்டு இருந்தார்கள். சாரியின் உதவியாளர், உங்களிடம் அழைப்பிதழ் உள்ளதா எனக் கேட்டார். ஏற்கனவே, நோட்டில் பதிவுசெய்துவிட்டோம் என்று சொன்னேன். "அது முக்கியமில்லை, உங்களுக்கு இந்த நிகழ்வு பற்றி எப்படித் தெரியும்?" எனக் கேட்டார். "நாங்கள் சாரு நிவேதிதாவின் வாசகர்கள் மற்றும் நண்பர்கள்; சாருவின் வலைப்பதிவைப் பார்த்து நாங்கள் வந்துள்ளோம்," என்றேன். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், உங்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
என்னதான் பிரச்சினை என்று பொறுமையாகக் கேட்டேன். "எங்கள் உறுப்பினர்களுக்கு உணவு போதவில்லை," என்ற உண்மையை சாரியின் உதவியாளர் கக்கினார்.
"We have come all the way to listen to Charu's speech and not for the food. Food is immaterial to us. We feel insulted," என்று கோபமாக சாரியிடம் கத்தினேன். உணவுதான் பிரச்சினை என்றால், இனி வரும் வாசகர்கள் அனைவரையும் முதல் தளத்திற்கு அனுப்புங்கள்; இரண்டாம் தளத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று கோரினேன். அவர் என்னை சமாதானப்படுத்தி, இனி வரும் வாசகர்கள் அனைவரையும் முதல் தளத்திற்கு அனுமதிப்பதாக உறுதியளித்தார்.
பிரபு ராமகிருஷ்ணனிடம் முத்துக்குமார் விஷயத்தைச் சொல்லி அவரைச் சமாதானப் படுத்தினார். 6:25-க்கு முதல் தளத்திற்கு வந்த சாரு நிவேதிதாவுக்கு இது எதுவும் தெரியாது. He was ignorant to all these nonsense. விழா ஆரம்பமாவாதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன் சாரி சாருவிடம், "உங்கள் blog-இல் நீங்கள் இந்த நிகழ்வு பற்றி எழுதியிருக்கக் கூடாது; எங்கள் உறுப்பினர்களுக்கு உணவு போதவில்லை," என்று சொல்லியிருக்கிறார்.
அரங்கு நிறைந்த கூட்டம். Extra chairs போட்டார்கள். ரவி தமிழ்வாணன் மேடையிலேயே, இவ்வளவு இளைஞர்கள் இங்குக் கூடி நான் பார்த்ததில்லை எனக் கூறினார். இந்த மகிழ்ச்சியான சூழலைக் கெடுக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தினால்தான் தான் அவமானப் படுத்தப் பட்டாலும், இது குறித்து சாரு நிவேதிதா தன் உரையில் எதுவும் சொல்லவில்லை.
எட்டு மணிக்குக் கூட்டம் முடிந்ததும், புத்தகங்களில் கையெழுத்து போட்டுவிட்டு, 8:15-க்கெல்லாம் சாரு நிவேதிதா கிளம்பிவிட்டார்.
அடுத்த நாள் காலை, ஸ்ருதி டிவி கபிலன் தொலைபேசியில் பேசினார். முதல் நாள் மாலை ஆறரைக்கு அவர் வந்த பொழுது Gate பூட்டியிருந்ததாகவும் சுமார் முப்பது பேரை உள்ளே விடவில்லை என்றும் கூறினார். கபிலன் பெரும் சண்டை போட்டு, மேலே வந்துள்ளார்.
சாரி எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளார். முதல் நாள் மாலை நடந்த விஷயங்கள் அனைத்தையும் சாரு நிவேதிதாவிடம் விலாவரியாகத் தொலைபேசியில் கூறினேன். தன்னையும் சாரி அவமானப்படுத்தியதாக சாரு நிவேதிதா கூறினார். தான் அவமானப்படுத்தப்பட்டபோது தாங்கிக்கொண்ட அவர், தன் நண்பர்கள் அவமானப்படுத்தப் பட்டதை அறிந்து மனம் வெம்பினார். அன்று மாலையே காட்டமாக ஒரு பதிவு போட்டார். அதுதான் மேலே உள்ள பதிவு.
மேலும், பிரபு ராமகிருஷ்ணன் தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி தன் நண்பர்கள் குழுவில் பதிவிடுகிறார். அதை நண்பர் ஒருவர் சாரு நிவேதிதாவுக்கு அனுப்பி வைக்கிறார். மேலே உள்ள பதிவில் அந்தக் கடிதம் உள்ளது.
சரி, சாரு நிவேதிதா தன் வலைத்தளத்தில் இந்த நிகழ்வு பற்றி எழுதியது தவறா என்று கேட்டால், எஸ். ராமகிருஷ்ணன் ஃபெப்ருவரி 2016-இல் எழுதிய பதிவைப் பார்க்கவும்.
http://www.sramakrishnan.com/?p=5216
எஸ்.ராமகிருஷ்ணன்:
ஃபெப்ருவரி 23ம் தேதி மாலை 5:45 மணிக்கு எனது சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நடைபெற உள்ளது.
Date: Tuesday, 23rd February 2016
Time: 5.45 p.m. to 8.15 p.m.
Venue: Tag Centre, New No. 69, T.T.K.Rd., Alwarpet, (Opp. Narada Gana Sabha), Chennai 600018
Book of the Month: `Sancharam` by S. Ramakrishnan
Reviewer: Smt. Chithra Balasubramanian
Programme:
5.45 p.m. to 6.30 p.m. High Tea
6.30 p.m. to 6.45 p.m. Prayer song followed by Welcome by Ravi Tamizhvanan
6.45 p.m. to 6.50 p.m. Presentation of the `Best Reviewer Award` for 2015 to Smt. Kanthalakshmi Chandramouli by Shri N. Goplaswami, former Chief Election Commissioner
6.50 p.m. to 7.05 p.m. Felicitation talk by Shri N. Gopalaswami
7.05 p.m. to 7.35 p.m. Review of the book `Sancharam` by Smt Chithra Balasubramanian
7.35 p.m. to 8.05 p.m. Author`s response followed by answers to selected
Questions from the audience by the author Shri S. Ramakrishnan
8.05 p.m. Vote of thanks by Charukesi
***
இருநூறு பேர் வந்துவிட்டார்கள் என்றால், விழா அமைப்பாளர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? வாசகர்களை இரண்டாம் தளத்திற்கு அனுப்பாமல், முதல் தளத்திற்கு மட்டும் அனுமதித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வாசகர்களிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது.
பின்குறிப்பு:
மொத்தம் நூற்றைம்பது பேருக்கான உணவு தயார் செய்யப்பட்டது. அதையும் தாண்டி வாசகர்கள் வந்தால், விழா அமைப்பாளர்கள் இப்படி இங்கீதம் இன்றி நடந்து கொள்ளலாமா? முதல் தளத்திற்கு மட்டும் வாசகர்களை அனுமதித்து இருக்கலாமே? சாரியின் தொனி எங்களை மிகவும் எரிச்சலூட்டியது. ஒரு வாதத்திற்கு, யாரையும் உள்ளே விடாமல் இருந்தால் கூட, அதைச் சொல்வதற்கு ஒரு முறை இருக்கிறது அல்லவா? அதுதான் இங்கே பிரச்சினை.
***