Showing posts with label பத்ரி சேஷாத்ரி. Show all posts
Showing posts with label பத்ரி சேஷாத்ரி. Show all posts

Thursday, May 5, 2016

எங்கே உன் கடவுள்? - தலைப்பு காமெடி

சாரு ஒரு நாள் ஃபோன் பண்ணி துக்ளக் கட்டுரைத் தொகுப்புக்கு தலைப்பு சொல்லுங்கன்னு சொன்னார். நான் அப்ப துக்ளக் கட்டுரைகள் படிக்கல. "எதைப் பத்தின புக் சாரு,"ன்னு கேட்டதுக்கு, "நிலம், நீர், காற்று, அரசியல், சமூகம் பத்தின புக்கு,"ன்னு சொன்னார். அப்ப திருநெல்வேலில இருந்து சங்கரன் கோயில் போயிட்டு இருந்தேன். போற வழியெல்லாம் யோசிச்சு, அப்புறம் சாருவுக்கு ஃபோன் பண்ணி, மூணு நாலு தலைப்பு சொன்னேன். 'ஒஸோன் ஓட்டை வழியே', 'பூமித் தாய்', 'என் தாய்' - இந்தத் தலைப்பக் கேட்டுட்டு சாரு சொன்னார்: "ஸ்ரீராம், விகடன்லாம் படிக்காதீங்க. இதெல்லாம் வைரமுத்து புக் பேரு மாதிரி இருக்கு. நான் சங்கப் பாடல்ல இருந்து தலைப்பு வெச்சுக்குறேன்"

அப்புறம், எங்கே உன் கடவுள்ன்னு தலைப்பு வெச்சவர் பத்ரி.

விகடன் படிச்சு மூணு வருஷம் ஆச்சுன்னு நான் சாருகிட்ட சொல்லல. இந்தக் கதையை எழுதத் தூண்டிய பிச்சைக்கு நன்றி.