Thursday, May 5, 2016

எக்ஸைலும் மாமரமும்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தேன். ஸ்தல விருட்சம் மாமரம். அதன் வயது 3500 வருடங்கள். இருபது வருடங்கள் முன் அது பட்டுப்போக ஆரம்பித்ததால், அந்த மரத்திலிருந்து திசு எடுத்து Genetic Engineering மூலம் இன்னொரு மாமரத்தை உருவாக்கி உள்ளனர். அது இப்போதைய ஸ்தல விருட்சம். பழைய மாமரத்தை நான்கு அடி வெட்டி, இப்போது கண்ணாடிப் பேழையில் பாதுகாத்து வருகின்றனர்.

ஐந்து நிமிடம் நின்று அந்த 3500 வருட மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எக்ஸைல் படிக்காமல் இருந்தால், ஒரு நொடி பார்த்துவிட்டு நகர்ந்திருப்பேன். எக்ஸைல் படித்ததால், 3500 வயது உள்ள என் பாட்டியைப் பார்ப்பது போல் இருந்தது. என் பாட்டி 3500 வருடங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தால் எப்படி இருக்கும்! அவளை எவ்வளவு வாஞ்சையோடு பார்ப்பேனோ, அப்படி பார்த்துக்கொண்டிருந்தேன் அந்த மரத்தை.

சாரு நிவேதிதா இதே விசயத்தை வேறு வார்த்தைகளில் எழுதியபோது, அவர் ஞானி; ஞானிகளால்தான் மரத்துடன் பேச முடியும் என்ற எண்ணிக்கொண்டு இருந்தேன். மூச்சு முட்டும் நவீன வாழ்வில் உழலும் ஒரு சராசரி மனிதனுக்கும் இதே எண்ண அலைவரிசையைத் தருகிறது எக்ஸைல்.