Tuesday, March 15, 2016

சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழா - அரங்கு Installation பற்றி

வடிவமைத்தவர்: ஓவியர் ஸ்ரீனிவாசன்; சாருவின் புகைப்படம்: பிரபு காளிதாஸ்

(குறிப்பு - படத்தை click செய்து, முழுத்திரையில் பார்க்கவும்)

சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஓவியர் ஸ்ரீனிவாசன் வடிவமைத்தது இந்த installation. மின்னஞ்சலில் அவர் அனுப்பியபோழுதே, பார்த்தவுடன் பிடித்துவிட்டது. வலது பக்கம் இருக்கும் floral designs யோனியின் வடிவம் போல் இருந்தது.

சாருவின் புகைப்படம் தலைகீழாக இருந்தது சாருவின் rebellious தன்மைக்கு பொருத்தமாக இருந்தது.

கீழே இடது மூலையில் ஒரு square இருந்தது. எதற்கு தனியாக இப்படி square வைத்திருக்கிறார், எதற்கு படத்தின் கீழே சாரு நிவேதிதா என்ற பெயர் வருகிறது என்றும் புரியவில்லை.

சாருவுக்கும் இந்த படத்தில் உபயோகப்படுத்தியிருக்கும் fonts பிடித்திருந்தது. முதல் தடவை பார்த்தவுடனே அவர் இந்த installation-ஐ okay செய்துவிட்டார். எந்த மாற்றமும் செய்யச்சொல்லவில்லை. "சாரு, ஏன் square வச்சிருக்காரு, ஏன் கீழ சாரு நிவேதிதான்னு பேர் இருக்கு? இதை ரெண்டையும் எடுக்க சொல்லிரலாமா?" என்று சாருவிடம் ஞானசூன்யமாகக் கேட்டேன். அவரும், "எடுக்க சொல்லிருங்க," என்றார். தொலைபேசியை வைத்தவுடன் திரும்பவும் அழைத்து, "ஸ்ரீராம், உங்களுக்கும் இதைப் பத்தி தெரியாது, எனக்கும் தெரியாது. அந்த square-உம் கீழே இருக்கும் பேரும் ஏதோ காரணமாகத்தான் வச்சிருப்பார்; Both adds something to the overall texture," என்றார்.



ஓவியர் ஸ்ரீனிவாசனுடன் பின்னர் பேசிக்கொண்டிருந்தபொழுது, இந்த installation-இல் பயன்படுத்தியிருக்கும் யுத்தியின் பெயர் 'Op Art' என்று விளக்கினர், 1930-களில் இந்த முறை பயன்பாட்டிற்கு வந்தது என்றார். 1930 - '60கள் வரை இங்கிலாந்தில் இந்த movement பிரபலமாக இருந்தது என்றும் கூறினார்.

"அந்த floral designs-உம், வலது மூலையில் உள்ள square-உம், கீழே உள்ள சாரு நிவேதிதா என்ற பெயரும், தலைகீழாக இருந்த சாருவின் படமும் இந்த படத்தைப் பார்க்கும் ஒருவனை disturb செய்யும். பார்வையாளனை 'சாரு நிவேதிதாவின் ஒன்பது புத்தகங்கள் வெளியீட்டு விழா' என்ற text-ஐ நோக்கி அவன் பார்வையை செலுத்த வைக்கும்," என்றார்.

மேலும், "தலைகீழாக இருக்கும் சாருவின் படத்தில் அந்த கண்கள் vertical-ஆக ஒரே நேர்கோட்டில் இருக்கும். இதை இரண்டு தனி புகைப்படங்கள் என்று புரிந்துகொள்ளக் கூடாது. இது ஒரு தனி புகைப்படம் என்றே புரிந்துகொள்ள வேண்டும்," என்றார்.

மேலும், "வெறும் யுக்தியாக மட்டும் இந்த installation-ஐ புரிந்துகொள்ளக் கூடாது. வேறு எந்த எழுத்தாளருக்கும் இப்படி தலைகீழாக படம் வைக்க முடியாது. சமூகத்தின் பொதுபுத்தியிலிருந்து விலகி, status quo-வுக்கு எதிராக செயல்படும் சாருவுக்கு மட்டுமே இந்த installtaion பொருந்தும்," என்றார்.