Thursday, December 31, 2015

அசோகமித்திரனின் 'யுத்தங்களுக்கிடையில்' - மதிப்புரை




'யுத்தங்களுக்கிடையில்' என்று தலைப்பு இருந்தாலும், நாவல் உலகப்போர்கள் பற்றி அல்ல. நூறு ஆண்டுகள் முந்தைய, ஒரு குடும்பத்தின் இரு தலைமுறைக் கதைதான் இந்நாவல்.

சிறிய நாவல். நான்-லீனியர் கதைசொல்லல் முறை. நான்- லீனியர் கதைசொல்லல் முறையை அசோகமித்திரன் 'கரைந்த நிழல்கள்' நாவலிலேயே வெற்றிகரமாகக் கையாண்டிருப்பார். இதே போன்ற கதைசொல்லல் முறையை அசோகமித்திரனின் மாணவாரான சாரு நிவேதிதா,  'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்' நாவலில் கையாண்டிருக்கிறார்.

பிடித்த கதாபாத்திரங்கள் பம்பாய் அண்ணா, சீதா, ராமேசன் உள்ளிட்டோர். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் இன்னாருக்கு இன்னின்ன உறவு என்று புரிந்துகொள்ள, இரண்டு மூன்று முறை படிக்க வேண்டும். ஆனாலும், ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் கதையையும் விரிவாக, சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் அசோகமித்திரன்.

இந்தியப் பெண்களின் சோகத்தை இந்த நாவலிலும் அசோகமித்திரன் சொல்லுகிறார். கதையில் நிறைய இளம் விதவைகள்; தொடரும் துர்மரணங்கள். சோகம்; பிழியப் பிழிய சோகம். ஆனால், படிக்க சுவாரசியாமாக உள்ளது. 'Pleasure of Text'-க்கு நல்ல உதாரணம் இந்த நாவல்.

இணையம் மூலம் வாங்க: http://www.udumalai.com/yutthankalukkukidaiyye.htm