ஒன்று இந்திரா பார்த்தசாரதியின் அரசியல் கருத்துக்களின் தாக்கம் சாரு நிவேதிதாவிடம் இருந்திருக்கலாம்; அல்லது, இருவரும் ஒரே அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். இருவருக்கும் கம்யூனிசம்பற்றி ஒரே கருத்துதான் இருக்கிறது.
இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள், அசுவாரசியாமான ஒரு நாவல். கம்யூனிச போலந்தில் நடக்கும் கதை.
சுஜாதாவின் சில விஞ்ஞான கதைகளில் வேற்றுகிரக ஜீவிகள், மிகுந்த அடக்குமுறைக்கு ஆட்பட்டிருப்பார்கள். சகலத்திற்கும் 'ரேசன்' முறை, சகலத்திற்கும் அரசின் அனுமதி என இருக்கும். அவற்றை படிக்கும்போது அதீத கற்பனையோ என தோன்றும். கம்யூனிச போலந்தில் அவை நடைமுறையில் இருந்தது இந்நாவல் மூலம் தெரிகிறது.
கதைசொல்லி போலந்த் சென்றாலும், கதை, கதைசொல்லியின் வீடு, தூதரகம், தூதர் வீடு, என ஒரு குறுகிய வட்டத்தில் நடக்கிறது. நாவலாசிரியர் கம்யூனிசம் எளிய மனிதனை எப்படி பாதித்தது என இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம். இதே கருத்தை வெங்கட் சாமிநாதனும் கூறுகிறார்.
'Frenzy of Exultations' என்ற அற்புதமான ஓவியத்தைப் பற்றி இந்நாவலின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.
Frenzy of Exultations |
***
ஏசுவின் தோழர்கள் மின்னூல் வாங்க: https://play.google.com/store/books/details?id=I3GOCgAAQBAJ
***
சத்திய சோதனை
ஓரிரவு ரயில் பயணத்தில் படித்த நாவல். இலக்கிய ஆசிரியர் pulp எழுதலாம். சுஜாதாவின் pulp அளவுக்குக்கூட இந்நாவல் இல்லை. கண்டிப்பாகப் படிக்க வேண்டாம்.
***